follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP1ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று(18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்த வரிசைகளைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.

இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இருதய , கண், சிறுவர் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளர்கள் அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர்.

அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க ஜனாதிபதி நிதியம் மற்றும் ஏனைய துறைகள் மூலம் வழங்கக்கூடிய நிவாரணம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் – ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர...

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய...