follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Published on

2024 நவம்பர் மாதம் அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபர் காலி, படபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் “வெல்லகே சமத்” என்பவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் – 071 8591484

எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு – 091 2291095

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் – ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர...

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய...