இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வாகித்தல் தொடர்பான விடயங்களில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் தேசிய விளையாட்டு சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் விதிகளின்படி, புதிய தேசிய விளையாட்டு சபை நியமனம் இன்று (14) அமைச்சர் சுனில் குமார கமகேவினால் மேற்கொள்ளப்பட்டது.
ரக்பி வீரரும் கூடைப்பந்து வீரருமான பிரியந்த ஏகநாயக்க, தேசிய விளையாட்டு சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
உறுப்பினர்கள் பின்வருமாறு,
சமந்தா நாணயக்கார
ருக்மன் வேகடபொல
சிதத் வெத்தமுனி
சானக ஜயமஹ
ரோஹான் அபேகோன்
நிரோஷன் விஜயகோன்
முராத் இஸ்மயில்
ரோஷான் மஹாநாம
சி. ரத்னமுதலி
ஸ்ரீயானி குலவன்ச
மலிக் ஜே. பெர்னாண்டோ
ஷானித பெர்னாண்டோ