follow the truth

follow the truth

February, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஷாபி குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை என்ற கம்மன்பிலவுக்கு வீடியோ ஆதாரம் காட்டிய NPP உறுப்பினர்

ஷாபி குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை என்ற கம்மன்பிலவுக்கு வீடியோ ஆதாரம் காட்டிய NPP உறுப்பினர்

Published on

NPP பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இந்திக நஜித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

NPP பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இந்திக நஜித்
கருத்துத் தெரிவிக்கையில்…

“யுத்தத்துக்கு பின்னர் இவர்கள் இருந்த அரசாங்கம்தான் இனவாதத்தை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு இல்லாத பிரச்சினைகளை உருவாக்கினார்கள்.

சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் விரோதமான மனநிலையை உருவாக்கினார்கள்.

மலட்டு சத்திரசிகிச்சை பற்றி , மலட்டுக் கொத்து பற்றி, மலட்டு உள்ளாடைகள் குறித்து, இப்படி இல்லாதவைகளை சொன்னார்கள்.

நான் ஒரு வைத்தியர், எனக்குத் தெரியும் அது எல்லாம் பொய் என்று”

இடையில் குறுக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…

” மலட்டு சத்திரசிகிச்சை பற்றி , மலட்டுக் கொத்து பற்றி, மலட்டு உள்ளாடைகள் குறித்து உதய கம்மன்பில சொன்ன சாட்சிகள் உங்களிடம் இருக்கிறதா?”

நான் ஒன்றை உங்களுக்கு போட்டுக்காட்டவா?

ஹா போடுங்கள் பார்ப்போம்.

இவர்கள் எவ்வாறு அரசியல் செய்தார்கள் என்று இவர்களுக்கே நினைவில் இல்லை. 32 செக்கன் வீடியோ இருக்கிறது.

அதன் பின்னர் உதய கம்மன்பில பேசிய வீடியோவை பாராளுமன்ற உறுப்பினர் போட்டுக்காட்டினார். அந்த வீடியோ இணைப்பு கீழே உள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்ச்சைக்குரிய USAID : நாமலுக்கும் ஜூலி சங்கிற்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஜூலி சங்...

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு அமெரிக்க திட்டங்கள் இடைநிறுத்தம்

அமெரிக்காவில் நிதியளிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால்...

சட்டப் பரீட்சையில் நாமல் காப்பி அடித்தாரா? சிஐடி விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக...