follow the truth

follow the truth

February, 19, 2025
Homeவிளையாட்டுதொடரை கைப்பற்றியது இலங்கை அணி

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

Published on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 101 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதன்படி, 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வௌ்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

WPL போட்டியில் இருந்து சமரி விலகல்

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது பங்கேற்று வரும் இலங்கை கெப்டன் சமரி...

கிரிக்கெட் காரணமாக 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

கிரிக்கெட் காரணமாக 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் மோகம்...

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம்...