follow the truth

follow the truth

February, 13, 2025
Homeஉள்நாடுமத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Published on

நிறுத்தப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அதற்கான கடன் தவணைக்கு சீனாவின் எக்ஸிம் வங்கியின் அனுமதியை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அதிவேக வீதியின் முதல் கட்டம் கடவத்தை தொடக்கம் மீரிகம வரையில் அமைந்துள்ளது. இதுவரை 20 வீத நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

2026ஆம் ஆண்டுக்குள் இதனை மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய அதிவேக வீதியில் பொத்துஹர முதல் கலகெதர வரையிலான பகுதி மூன்றாம் கட்டத்திற்கு உரித்தானதாகும். மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர், பொறியியலாளர் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி தேசிய மருத்துவமனையில் முக்கிய கட்டுமானப் பணிகளை முடிக்க 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டம்

கண்டி தேசிய மருத்துவமனையின் 04 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை...

மஹிந்தவின் இல்லத்திற்கான நீர் விநியோக துண்டிப்பு தொடர்பில் அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை...

சதொச ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பு

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல்...