follow the truth

follow the truth

February, 12, 2025
HomeTOP1கைவிடப்பட்ட வேலைத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை

கைவிடப்பட்ட வேலைத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை

Published on

கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலங்கள், வளைவுகள் மற்றும் கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துறைசார் பிரதியமைச்சர் ருவன் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இந்த வேலைத் திட்டங்களுக்கான நிர்மாணப்பணிகள் உரிய திட்டமிட்டமின்றி ஆரம்பிக்கப்பட்டமையினால் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுனார்.

இது தொடர்பாக ஆராய்ந்து எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக இடைநடுவே கைவிடப்பட்ட அனைத்து வேலைத் திட்டங்களையும் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற...

எம்.பி அர்ச்சுனா தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில்...

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறை ஊழியர் பணி நீக்கம்

கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை இன்று (12) பணி நீக்கம் செய்ய ரயில்...