follow the truth

follow the truth

February, 11, 2025
Homeஉள்நாடுகெஹெலிய வீட்டின் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கெஹெலிய வீட்டின் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டின் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியைப் பார்வையிட்ட பின்னர், வழக்கைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பொலிஸ் தீர்மானிக்க முடியும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மின்வெட்டு இல்லை

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால்...

IMF பணிப்பாளர் – பிரதமர் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு...

யோஷிதவின் டெய்சி பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு (Daisy Forrest) கடுவலை...