follow the truth

follow the truth

February, 11, 2025
Homeஉள்நாடுலெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்

Published on

லெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்கத்தினூடாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.

நேற்றிரவு இஸ்ரேலின் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீதே வான்வழித் தாக்குதலை நடத்தியது.

கடந்த நாட்களிலும் இந்த சுரங்கப் பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தமுள்ள சூழலில், இதனை மீறும் வகையில் இந்த தாக்குதல் அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கங்காராம நவம் மஹா பெரஹெர – இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக இன்று(11) மற்றும் நாளை(12) இரவு...

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்கு பலம் வாய்ந்த தரவு முறைமை அவசியம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும்...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

கொட்டாஞ்சேனை புனித பெனடிக் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ்...