follow the truth

follow the truth

April, 20, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு மீண்டும் தடை

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு மீண்டும் தடை

Published on

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பிபா (FIFA) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு உத்தரவிட்டது. இதை கண்காணிக்க விசேட குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த விசேட குழு பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நடைமுறைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என பிபா (FIFA) அறிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3-வது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது.

பிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என தெரிகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...

அதிவேக 1000 ஓட்டங்கள்.. – சச்சினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த படிதார்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே...