பிரேசிலின் சாவ் பாலோ நகரில், நெரிசலான தெருவில் ஒரு இலகுரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் பயணித்த பேருந்து உட்பட பல வாகனங்கள் மீது விமானம் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குப் பிறகு விமானமும் விபத்தில் சிக்கிய வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன.
இந்த இலகுரக விமானத்தின் உரிமையாளர் ஒரு பணக்கார வழக்கறிஞர் என்று தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.