follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2"தீப்பிடித்து எரிந்த எனது வீடு இன்னும் கட்டப்படவில்லை, நான் ஒரு சிறிய கொட்டிலிலேயே வசிக்கிறேன்."

“தீப்பிடித்து எரிந்த எனது வீடு இன்னும் கட்டப்படவில்லை, நான் ஒரு சிறிய கொட்டிலிலேயே வசிக்கிறேன்.”

Published on

முந்தைய அரசுகள் செய்த அதே செயல்களையே இந்த அரசும் செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவிக்கிறார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தொடர்ந்தும் கருத்து கருத்து தெரிவிக்கையில்;

கேள்வி : நீங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். நீங்கள் அமைச்சரவை அமைச்சர் பதவிகளையும் இராஜாங்க அமைச்சர் பதவிகளையும் வகித்தீர்கள்.. இன்னும் அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளையும் சித்தாந்தங்களையும் வகித்த ஒருவர். நீங்கள் ஒன்றுமில்லாமல் இப்போது அமர்ந்திருக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

பதில் : அப்படி எந்த பிரச்சினையும் இல்லை. நான் 2000 முதல் 2024 வரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். நாங்கள் அரசியல் செய்வது பதவிகளுக்காகவோ அல்லது அரசாங்கங்களுக்காகவோ அல்ல.

கேள்வி : நீங்க அமைச்சராக இல்லாமல், எம்.பி.யாக இருந்தபோதும் அரசு வீட்டைப் பயன்படுத்தியதாகக் சொன்னீங்களா? உங்க சொந்த முகாமில் உள்ளவங்க நீங்க அரசாங்க வீட்ல இருக்கீங்கன்னு சொன்னாங்க. ஏன் அப்படி?

பதில் : 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நான் எந்த அதிகாரப்பூர்வ இல்லத்திலும் வசிக்கவில்லை. நான் 1989 ஆம் ஆண்டு என் தந்தையுடன் கொழும்புக்கு வந்தேன், என் தந்தைக்குஅப்போது எம்பிக்களுக்கு தெப்ரபேன் ஹோட்டலில் அறைகள் வழங்கப்பட்டிருந்தது.

அதனால்தான் நான் 10 வயதாக இருந்தபோது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு வசதியில் வாழத் தொடங்கினேன் எனலாம்..

ஆதலால் நான் 35 வருடங்களாக ஒரு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்துள்ளேன்..

நான் இப்போது என் வீட்டில் இருக்கிறேன். நான் அமைச்சராக இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, உத்தியோகபூர்வ இல்லத்தில் இருக்க காரணம் ஆர்ப்பாட்டம் தான்.. ​​ ஆர்ப்பாட்டத்தின் போது, ​​அனுராதபுரத்தில் உள்ள எங்கள் வீடு எரிக்கப்பட்டது. அதனால் தான் அந்த அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிறிது காலம் தங்க முடிந்தது. இப்போது நான் வீட்டில் ஒரு சிறு பகுதியிலேயே வசித்து வருகிறேன்..

கேள்வி : இறுதியாக, நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : இந்த நாட்டில் முந்தைய அரசாங்கங்கள் நல்லவை அல்ல என்று சொன்ன இந்த அரசாங்கங்கள், தாங்கள் நல்லவர்கள் என்று சொன்னதால், இந்த நாட்டில் அதிகாரம் வழங்கப்பட்டது.

முந்தைய அரசுகள் செய்த அதே செயல்களையே இந்த அரசும் செய்கிறது. ஆனால் மக்கள் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்த்தார்கள்?
முந்தைய அரசாங்கங்களின் நடத்தையை அல்ல. இது ஒரு விளையாட்டு அல்ல. இரண்டாவது போராட்டம் எப்போது ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியாது.
நாங்கள் போராட்டத்தை விரும்பவில்லை. ஒரு அரசியல் கட்சியாக, நாங்கள் எப்போதும் மக்களின் பக்கம் நிற்கத் தயாராக இருக்கிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...