follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1உப்பு விலை அதிகரிப்பு - இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு

உப்பு விலை அதிகரிப்பு – இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு

Published on

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலையை கருத்தில் கொண்டு உப்பு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலகா தெரிவித்துள்ளார்.

அதன்படி, 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

ஒரு கிலோ கல் உப்பு பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவில் இருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளது.

இதற்கிடையில், உப்பு இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 11,880 மெட்ரிக் டன் உப்பு தீவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வணிக இதர கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஹம்பாந்தோட்டை உப்புத் தொழிற்சாலையில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனதிற்கு சுகாதார அமைச்சர் விஜயம்

இந்த நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார...