களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த நீர் விநியோகத் தடை நாளை(7) காலை 8 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.