பாரிய வருமானம் மற்றும் பாரிய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் கூப்பன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விலை உயர்த்தப்படும் போது, அந்த விலையில் எரிபொருளை வாங்கக் கூடியவர்கள் அதைத் தொடர்வார்கள், அதே நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குறைந்த அளவிலான எரிபொருளை வாங்குவார்கள் அல்லது வாங்க மாட்டார்கள் இதனால் விலையை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்குப் பதிலாக கூப்பன் முறையை மக்களிடையே அறிமுகப்படுத்துவது சிறந்தது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்