follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2ரணிலின் வலையில் சிக்க வேண்டாம் - போராட்டத்திற்கு தயாராகும் SJB

ரணிலின் வலையில் சிக்க வேண்டாம் – போராட்டத்திற்கு தயாராகும் SJB

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை வலியுறுத்தி பெப்ரவரி 8 ஆம் திகதி காலை கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியை எதிர்த்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறியக்கிடைத்துள்ளது.

கட்சியின் அரசியல் வட்டாரங்களின்படி, இந்தப் போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, பிரசாத் சிறிவர்தன மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை பின்வரிசை எம்.பி.க்கள் எதிர்க்கின்றனர் என்ற வதந்திகள் பொய்யானவை என்று கூறுகிறார்.

இந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இரு கட்சிகளிலும் உள்ள மிகச் சிறிய குழுவினர் மட்டுமே தங்கள் குறுகிய நலன்களுக்காக இரு கட்சிகளும் இணைவதை விரும்பவில்லை என்றும், அந்தக் குழுவின் எதிர்ப்பையும் மீறி, நாட்டின் நலனுக்காக இரு கட்சிகளும் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.

xrtye34f

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல் முறையாக சீனாவில் தங்க ATM அறிமுகம்

தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க...

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...