follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதெற்கு அதிவேக வீதியில் விபத்து - இருவர் பலி

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் பலி

Published on

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை பாரட்டுவ மற்றும் கபுதுவ இடையேயான பரிமாற்றத்திற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மத்தளை நோக்கி பயணித்த ட்ரக் பாரவூர்தி ஒன்று கவனக்குறைவாக நிறுத்தப்பட்ட நிலையில், அதே திசையில் பயணித்த பௌசர் ஒன்று அதில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் ட்ரக் பாரவூர்தியில் பயணித்த கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பௌசர் வாகனத்தின் சாரதியான 61 வயதுடைய கொனவலவைச் சேர்ந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பௌசர் வாகனத்தின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...