follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுதமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எழுத்துமூல ஆவணம் இன்று தயாரிக்கப்படவுள்ளது!

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எழுத்துமூல ஆவணம் இன்று தயாரிக்கப்படவுள்ளது!

Published on

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாமல் நிறைவடைந்தது.

இந்த நிலையில், அது குறித்து ஆராய்ந்த குறித்த கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை, அந்த பொது ஆவணத்தை உறுதிசெய்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம், குறித்த பொது ஆவணத்தின் எழுத்துமூல வடிவம், முழுமையாக தயாரிக்கப்பட உள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்வரும் சில தினத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களது கையொப்பத்துடன், இந்தப் பொது ஆவணம் வெளியிடப்படவுள்ளது.

அந்த ஆவணம், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கும், அனைத்து உள்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கையளிக்கப்படும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...