follow the truth

follow the truth

February, 2, 2025
Homeஉள்நாடுசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Published on

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

38,800 சிகரெட்டுகள் அடங்கிய 179 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 53 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானப் பயணி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மறைத்து வைத்திருந்த சிகரட்டுப் பொதிகள் எதிர்வரும் 5ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை, கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி?

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு முட்டையின் விலை 26...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு

எதிர்வரும் நான்காம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு விசேட...

திடீர் சுகயீனம் – கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் திடீர் சுகயீனம்...