follow the truth

follow the truth

February, 2, 2025
HomeTOP1இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

Published on

இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார்.

இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 1032 கோடியாகும்.

இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை, கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி?

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு முட்டையின் விலை 26...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு

எதிர்வரும் நான்காம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு விசேட...

திடீர் சுகயீனம் – கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் திடீர் சுகயீனம்...