follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

Published on

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.

அர்ச்சுனா நேற்று (29) விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.

இந்த முறை மக்களுக்காக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தான் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் அவர் கூறினார்.

“எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. 38 வருடங்களாக நான் ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் மக்களுக்காகவே இங்கு வந்துள்ளேன். அதனால் இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் இருக்கும் காலம் வரைக்கும் நிமிர்ந்து நிற்பேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் இன்சுலின் தட்டுப்பாடு இல்லை

அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம்...

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க – ராஜித

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில்...

நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை...