follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுமுருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது!

முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது!

Published on

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட ‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜெனீவா நகரைத் தளமாகக் கொண்டு இலங்கையின் இறையாண்மையில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை ஆய்வுக்குட்படுத்தியும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாட்டில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், ஆனந்த தேரரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான குணபால திஸ்ஸகுட்டியாரச்சியினால் எழுதப்பட்ட “அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள்” நூலும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கொழும்பு ஹெவ்லொக் டவுன் சாம விஹாராதிபதி சங்கைக்குரிய அதபத்துகந்தே ஆனந்த தேரரும் கலந்துகொண்டிருந்தார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில்...