follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுமின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

Published on

கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் சலுகைக் காலத்தை வழங்குவதற்கு 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 2021 ஏப்ரல் மாதம் தொடக்கம் கொவிட் 19 தொற்று மீண்டும் பரவியமையால் சுற்றுலாத்துறையில் எதிர்பார்க்கப்பட்ட விருத்தி ஏற்படாமையால், சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை 2021 மார்ச் மாதம் 01 திகதி தொடக்கம் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம்...

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி...