follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP1போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க காவல்துறையிடமிருந்து மென்பொருள்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க காவல்துறையிடமிருந்து மென்பொருள்

Published on

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டம் வீதி விபத்துகளை குறைக்கும் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக கொழும்பு நகரில் கடந்த காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மென்பொருளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த புதிய மென்பொருளின் மூலம் கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் கொழும்பில் உள்ள பிரதான CCTV செயற்பாட்டு அறையின் CCTV அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு, சாரதி வசிக்கும் பிரிவுக்குட்பட்ட காவல்நிலையத்தில் உள்ள காவல்துறையிடம் குற்றம் முறைப்பாடு அளிக்கப்பட்டு அதற்கான அபராதம் சாரதியிடம் இருந்து பெறப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம்...