follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுசமையல் எரிவாயு வெடிப்பு - இதுவரை 7 பேர் உயிரிழப்பு

சமையல் எரிவாயு வெடிப்பு – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

Published on

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் எரிவாயு வெடிப்புடன் தொடர்புடைய 847 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரையில் எரிவாயு விபத்துக்களினால் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்பட்ட 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 797 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், லாஃப் சிலிண்டர்களில் 50 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...