ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க, நுவா கட்சியின் தலைவர் அசாத் சாலி, முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்ன கோன் ஆகியோரே இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியில் இவர்கள் முன்னணி செயற்பாட்டாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வருமாறு அழைப்பு வந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பலர் பேச ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான தகவல்களை தொடர்ந்து எதிர்பாருங்கள்.