follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுசிலிண்டர் வெடிப்புச் சம்பவம் : அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் : அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

Published on

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணைகள் கடந்த 11ஆம் திகதி நிறைவடைந்ததாகவும் அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இவ்வாறு சமரப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர் தீ, வெடிப்புகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்க நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ப்ரோப்பேன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று(20) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில்...

“ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”

இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம்...