follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுபேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

Published on

கண்டியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போகம்பரை தொலைதூர பேருந்து நிலையத்தில் நின்ற 23 வயதுடைய யுவதியை சாரதி மற்றும் நடத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த யுவதி செல்லும் இடத்திற்கு பேருந்து செல்வதாக கூறி, கடத்தி செல்லப்பட்டுள்ளார். கொழும்பு – கண்டி தனியார் பேருந்திற்குள் ஏற்றி கண்டி நீதிமன்ற வழாகத்திற்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோரை இழந்த குறித்த யுவதி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.

இறுதியாக பணியாற்றிய வீட்டில் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறி அவர் அந்த வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறியுள்ளார்.

அங்கிருந்து தப்பியவர் நுவரெலியாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில்...

“ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”

இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம்...