follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஅதிகரித்த சம்பளம் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்

அதிகரித்த சம்பளம் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்

Published on

அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ் மத்திய கல்லூரியில் நேற்று (18) இடம்பெற்ற அதிபர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த வருட சம்பளத் திகதியில் நமக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்காவிட்டால் மறுநாள் எமது போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு மற்றும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் 6 மாத காலத்திற்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...