follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் பயணித்த இடங்களில் பரிசோதனை

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் பயணித்த இடங்களில் பரிசோதனை

Published on

ஒமிக்ரொன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டவர், நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டவர் தவிர்ந்த, ஏனைய அனைத்து ஒமிக்ரோன் தொற்றாளர்களும் குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த தொற்றாளருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஒமிக்ரொன் தொற்று உறுதியானது.

இந்தத் திரிபை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு இரண்டு வாரங்களானமையால், ஒமிக்ரொன் தொற்று உறுதியானவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...

மொனராகலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் வைத்தியசாலையில்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...