follow the truth

follow the truth

April, 26, 2025
HomeTOP2அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை

அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை

Published on

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அல்பேனியாவில் கடந்த மாதம் ஒரு பாடசாலையில் 14 வயது மாணவன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமே இந்த TikTok ஒடுக்குமுறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட TikTok தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாக TikTok கூறியது.

கொலை செய்யப்பட்ட 14 வயது பாடசாலை மாணவனோ அல்லது கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரோ TikTok கணக்குகளை வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று TikTok கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...

பரிசுத்த பாப்பரசரின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை செலுத்தினார். புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்...

கண்டியில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள்...