follow the truth

follow the truth

April, 22, 2025
Homeவிளையாட்டுஇந்தியா- பாகிஸ்தான் போட்டி நிலவில் நடந்தாலும் கூட... மகிழ்ச்சி - முகமது அமிர்

இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிலவில் நடந்தாலும் கூட… மகிழ்ச்சி – முகமது அமிர்

Published on

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இதனால் பாகிஸ்தான்- இந்தியா இடையிலான போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

ஐசிசி-யின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக முகமது அமிர் கூறுகையில்;

“ஒரு கிரிக்கெட்டராக, இந்தியா- பாகிஸ்தான் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் நிலவில் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் அதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.

முக்கியத்துவம் போட்டியில் உள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் உள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலைப் பார்க்க விரும்புவோர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

2031 வரையிலான போட்டியை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வேலையை இரண்டு மாதத்திற்கு முன்பு ஐசிசி தொடங்கியது ஏன்?. ஐசிசி-யின் செயல்பாடு மிக மிக சோம்பேறித்தனமாக உள்ளது” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...