follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பம் - ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை

போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பம் – ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை

Published on

பரீட்சை ஆணையாளரினால் நேற்று (08) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சை ஆணையாளரினால் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களால் பரீட்சை ஊழியர்களுக்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதலாவது கடிதம் வழங்கப்பட்டது. அந்த கடிதத்தின்படி, பரீட்சை மண்டபத்தில் இருந்து பயணிக்கும் தூரம் 10 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 1000 ரூபா செலுத்த முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் மாதம் 8ஆம் திகதி பரீட்சை ஆணையாளரால் மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி 1000 ரூபாவாக இருந்த போக்குவரத்து கொடுப்பனவு 500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 முதல் 10 கிலோமீற்றர் இடைப்பட்ட தூரத்திற்காக 750 ரூபா முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது 400 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 முதல் 5 கிலோமீற்றருக்க 500 ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அது ​​300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கிலோமீற்றருக்கு குறைவாக இருந்தால் 300 ரூபா வழங்குவதாகவும், அது தற்போது 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பரீட்சை கண்காணிப்பாளருக்கும் கொடுப்பனவு வழங்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கடிதமொன்று வௌியிடப்பட்டு இவ்வாறு கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அனைவரும் குழப்பத்தில் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...