கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயிற்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (09) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.