follow the truth

follow the truth

April, 22, 2025
Homeவிளையாட்டுமுதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி

Published on

பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ஓட்டங்களை எடுத்தது. தன்ஜித் ஹசன் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மெஹிதி ஹசன் 74 ஓட்டங்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 295 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் ரூதர்போர்ட் அதிரடியாக ஆடினார். அவர் 80 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 113 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அவருக்கு ஷாய் ஹோப் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 86 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ஓட்டங்களை சேர்த்தது.

இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 295 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...