follow the truth

follow the truth

April, 28, 2025
Homeஉலகம்விமானங்களை தொடர்ந்து தாஜ்மஹாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்?

விமானங்களை தொடர்ந்து தாஜ்மஹாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்?

Published on

தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த நிலையில், தாஜ் மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தாஜ் மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் போலியாக மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து இந்திய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...