follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவிப்பு

Published on

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஆதலால், கவனமாக வாகனம் செலுத்துவதும், வீதி விதிகளை கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம். அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும்  போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

அத்துடன்,போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும்...