புகையிரத திணைக்களத்தின் வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கப்படும் ஊழல்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புகையிரத சேவை தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.
இந்நிலையில், அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்த அந்த தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.