follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

Published on

நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் இன ஐக்கியத்திற்கு மாறாக இனப் பிளவினையே விதைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனவர்களுக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரிவினையை நோக்கிச் செல்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தையோ அதற்கு அப்பாலான தீர்வினையோ பொதுமக்கள் கோரவில்லை எனவும் அதனை சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்களே கோரி நிற்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கரு அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக காத்தான்குடியில், பள்ளி சம்மேளனத்தின்  நிர்வாகமே நடைபெறுகின்றது , அங்கு பொதுவான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை என ஞானசார தேரர் தெற்கு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...