follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉலகம்மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

Published on

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் நடப்பு பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று காற்று மாசு தரக்குறியீடு 481 என்ற அளவில் பதிவாகியுள்ளது. காற்றின் தரக் குறியீடு 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்றது இல்லை என்ற நிலையில், டெல்லியில் காற்று மாசு 450ஐ கடந்துள்ளது.

ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய 160 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் 7 விமானங்கள் முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 30 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...