follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுSLSI தரத்திற்கு அமையவே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் - லிட்ரோ எரிவாயு நிறுவனம்

SLSI தரத்திற்கு அமையவே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம்

Published on

SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு நேற்று ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விசாரணையின் போது,எரிவாயு சிலிண்டரின் கலவை, அந்த கலவை சிலிண்டரில் தென்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் தற்போது சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளிடம் வினவியிருந்தனர்.

இதன்போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசூரிய, இந்த விடயம் தொடர்பாக தனது கட்சிக்காரரிடம் கேட்டறிந்து சமர்ப்பணங்களை முன்வைக்க இன்று வரை கால அவகாசம் பெற்றுத்தருமாறு நீதிமன்றில் கோரியிருந்தார். அதன்படி, இன்று தனது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்த போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சி

பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய...