follow the truth

follow the truth

April, 29, 2025
HomeTOP2இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய கட்டார்

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய கட்டார்

Published on

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது.

இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கட்டார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக இப்போது அறிவித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கிறார்களே தவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருவது இல்லை. இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு. அமைதிக்கும் தாமாக முன்வருவது இல்லை. அவர்கள் ஆர்வம் காட்டும் போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதுவரை பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயாராக இல்லை.

கட்டாரில் ஹமாஸ் போராளிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமாஸ் படைகள் அத்துமீறி தாக்குகின்றன. போரை நிறுத்த விருப்பம் இல்லை. அப்படி இருக்கும் போது ஹமாஸ் படையினரை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டார் உள்ளே அனுமதிக்க முடியாது.

ஹமாஸின் அரசியல் கட்டிடம் தோஹாவில் உள்ளது. இனியும் அது செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்து உள்ளது. 10 நாட்களுக்கு முன் இஸ்ரேல் – கட்டார் இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தோம். இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தையில் முடிவு வரும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இரண்டு தரப்பும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருக்க நாங்கள் பேச்சுவார்த்தையை தொடர்வது சரியாக இருக்காது.

அதனால் பேச்சுவார்த்தையை முடிக்கிறோம் என்று கட்டார் கூறி உள்ளது. கட்டாரில் ஹமாஸ் போராளிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில்.. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்ற அதே நேரத்தில் கட்டார் இந்த முடிவை எடுத்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...