follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉலகம்16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

Published on

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக், டிக்டொக் மற்றும் எக்ஸ் தளம் ஆகிய சமூக ஊடகங்கள் இந்த சட்டத்திற்குள் அடங்கும் எனவும் அத்துடன், யூடியூப் சமூக ஊடகமும் உள்ளடக்கப்படும் என அவுஸ்திரேலிய தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் தெரிவித்துள்ளா்.

“எங்கள் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன. அதனால் நான் அதை தடைசெய்ய அழைப்பு விடுத்துள்ளேன் என அன்டனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் சமர்பிக்கப்படும். சமர்பிக்கப்பட்ட சட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தை பெற்று 12 மாதங்களுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...