follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP1உதய கம்மன்பில வௌிக்கொணரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 2வது அறிக்கை

உதய கம்மன்பில வௌிக்கொணரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 2வது அறிக்கை

Published on

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாமின் அறிக்கை இன்று (28) பிவித்துரு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் இனது அறிக்கையினை கடந்த 21ஆம் திகதி முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையின்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குப் பதிலளித்த பிரதமர்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும்...

நடமாடும் தேங்காய் விற்பனை – இன்று நாரஹேன்பிட்டி

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக...

அமைச்சர் விஜிதவுக்கு கம்மன்பிலவிடம் இருந்து மற்றுமொரு சவால்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை...