follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP2அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

Published on

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மல் வீதியில் உள்ள தனது பிரச்சார அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“அந்த தாக்குதல் பற்றிய முதல் தகவல் எங்கள் காலத்தில் வந்தது. நானும் அறுகம்பே சென்றேன். அதிக கவனம் செலுத்தவே நானாக சென்றேன். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தோம். தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் செய்தது அமெரிக்காவின் எச்சரிக்கையைக் கண்டவுடன் பொலிஸாரையும் இராணுவத்தையும் அறுகம்பேக்கு அனுப்பியது. இதைக் கண்டு ஏனைய நாடுகள் அச்சமடைந்தன. அந்த பகுதிகளுக்கு நாம் STF ஐ அனுப்பியது போதைப்பொருள் கடத்தலை தடுக்க என்று வேறுபட்ட உத்தியை கையாண்டாகும்.. அதை வைத்தே ஆபத்து குறித்த தகவல்களை சேகரித்தேன்’’ என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் இராணுவம் ட்வீட்...

திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்…

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின்...