follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

Published on

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், அந்த மாவட்டத்திற்கு இன்று விநியோகம் செய்யப்படமாட்டாது என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 3ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டு. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில்,...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான...

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை”

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என...