follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Published on

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கென 1576 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கென கோரியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முகம்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 600 அரச அதிகாரிகளும் 500 பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கமைய வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களின் அடிப்படையில்...

ரயில்வே ஊழியர்களுக்கு இலவச ரயில் அனுமதிச் சீட்டு

அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்...

ஜனாதிபதி மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான...