எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கென 1576 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கென கோரியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீர் அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முகம்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 600 அரச அதிகாரிகளும் 500 பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதற்கமைய வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.