follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Published on

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி கூறுகிறார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு தபால் மூல வாக்களிப்பதற்காக 1,576 அரச ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

அவசர நிலை ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 600 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வாக்குப்பெட்டிகள் நாளை (25) காலை விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்தார்.

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் எனவும், இரவு 10.00 மணிக்குள் வாக்குகளின் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை (26) நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது – விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு...

நாமல் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு...

பாதுகாப்பு தேவைப்படும் இஸ்ரேலியர்களுக்கு உதவ பொலிசார் தயாராக உள்ளனர்

சுற்றுலாப் பயணி அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக இந்த நாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைக்கு சில தனிப்பட்ட...