follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

Published on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டலஸ் அழகபெரும, ரமேஷ் பத்திரன மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறாதென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிசக்தி, சுற்றுலா, முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு...

நாட்டில் இன்சுலின் தட்டுப்பாடு இல்லை

அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம்...

சிறி தலதா வழிபாட்டு தகவல்களை பார்வையிட விசேட வலைத்தளம்

சிறி தலதா வழிபாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அவசியமான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து இணையம் மூலம் பெறுவதற்காக...