அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின் அறிக்கையின் அடிப்படையிலும் ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக்கொள்ளுமாறு ரஷ்ய தூதரகம் ரஷ்ய பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய இராச்சியமும் முன்பு அருகம்பே பகுதிக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.
இப்பகுதிக்கு அமெரிக்கா வழங்கிய பயண ஆலோசனையை மேற்கோள் காட்டி இங்கிலாந்தும் தனது ஆலோசனையை புதுப்பித்துள்ளது.